Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40

Subscribe to Oneindia Tamil

Gas Cylinder
சென்னை: பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் மீதான தனது கட்டுப்பாட்டை அரசு நீக்கியதைத்தொடர்ந்து நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் விலையும் உயர்ந்து விட்டது.

இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3.73, டீசல் ரூ.2, மண்ணெண்ணெய் ரூ.3, காஸ் சிலிண்டர் ரூ. 35 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி, இறக்கிக் கொள்ள எண்ணை உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதுவரை இதன் மீதான தனது கட்டுப்பாட்டையும் நீக்கிக் கொண்டது. இதையடுத்து முதல் கட்டமாக இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அதேசமயம், சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப இந்த விலை உயர்வு இனி அடிக்கடி ஏற்படும். இதை இனிமேல் அரசு கட்டுப்படுத்தாது. அதேசமயம், மண்ணெண்ணெய் மற்றும் காஸ் விலை நிர்ணயத்தை மட்டும் அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

சென்னையில் என்ன விலை

விலை உயர்வுக்குப் பின்னர் சென்னையில் பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை நிலவரம்

பெட்ரோல் - 1 லிட்டர் ரூ. 55.92 (பழைய விலை ரூ. 52.13-உயர்வு ரூ.3.79)
டீசல் - ரூ. 40.07 (ரூ. 38.05-ரூ. 2.02)
கெரசின் - ரூ.11.36 (ரூ.8.40 - ரூ.2.96)
காஸ் - ரூ. 352.35 (ரூ. 315.95-ரூ. 36.40)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+