தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40
அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் விலையும் உயர்ந்து விட்டது.
இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3.73, டீசல் ரூ.2, மண்ணெண்ணெய் ரூ.3, காஸ் சிலிண்டர் ரூ. 35 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி, இறக்கிக் கொள்ள எண்ணை உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதுவரை இதன் மீதான தனது கட்டுப்பாட்டையும் நீக்கிக் கொண்டது. இதையடுத்து முதல் கட்டமாக இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
அதேசமயம், சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப இந்த விலை உயர்வு இனி அடிக்கடி ஏற்படும். இதை இனிமேல் அரசு கட்டுப்படுத்தாது. அதேசமயம், மண்ணெண்ணெய் மற்றும் காஸ் விலை நிர்ணயத்தை மட்டும் அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
சென்னையில் என்ன விலை
விலை உயர்வுக்குப் பின்னர் சென்னையில் பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை நிலவரம்
பெட்ரோல் - 1 லிட்டர் ரூ. 55.92 (பழைய விலை ரூ. 52.13-உயர்வு ரூ.3.79)
டீசல் - ரூ. 40.07 (ரூ. 38.05-ரூ. 2.02)
கெரசின் - ரூ.11.36 (ரூ.8.40 - ரூ.2.96)
காஸ் - ரூ. 352.35 (ரூ. 315.95-ரூ. 36.40)