மெக்சிகோவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அமைச்சர் உள்பட 8 பேர் பலி
மான்டெரி: மெக்சிகோ நாட்டில் நடந்த விமான விபத்தில் அந்த நாட்டு அமைச்சர் உள்பட 8 பேர் பலியானார்கள்.
மெக்சிகோ நாட்டில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ஹரோசியா பாஸ்கி. அங்குள்ள நேகராஸ் நகருக்கு அவர் சிறிய ரக விமானத்தில் சென்றார். அவருடன் நகர மேயர் ஜோஸ்மா செபேஸ் உள்பட 7 அதிகாரிகள் சென்றனர். அவர்கள் வடக்கு மெக்சிகோவில் அலெக்ஸ் சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட சென்றனர்.
அவர்கள் சென்ற விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து கீழே விழுந்த விமானம் தரையை தட்டியபோது தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 8 பேரும் உயிரிழந்தார்கள். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த விபத்திற்கு எந்திர கோளாறுதான் காரணம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், விமானம் விழுந்த இடத்தை அன்மையில் தான் சூறாவளி தாக்கியதால், விபத்திற்கு வானிலை காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications