சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 30 ஆந்திர எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிராவில் கைது
நான்டெட், மகாராஷ்டிரா: தடை உத்தரவை மீறி மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் பகுதிக்குள் செல்ல முயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, 30 ஆந்திர மாநில எம்.எல்.ஏக்கள், 8 எம்.பிக்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் பகுதியில் கோதாவரி ஆற்றின் குறுக்கே மகாராஷ்டிர அரசு பாப்லி அணையை கட்டி வருகிறது. இதற்கு ஆந்திரா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் அணைப் பகுதிக்குச் சென்று பணிகளைத் தடுக்கும் போராட்டத்தை அறிவித்திருந்தார் நாயுடு. இதையடுத்து மகாராஷ்டிர எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பஸ் யாத்திரை மூலம் மகாராஷ்டிர எல்லையை வந்தடைந்த நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் குழுவினர் நான்டெட்டுக்குள் நுழைந்தபோது அவர்களை மகாராஷ்டிர போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
முன்னதாக மகாராஷ்டிராவுக்குள் நுழைந்து அமைதியைக் குலைக்க முயன்றால் நாயுடு உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் தடையை மீறி நாயுடு உள்ளிட்டோர் மகாராஷ்டிராவுக்குள் நுழைந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications