இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ நடவடிக்கை: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறி்த்து பிரதமருக்கு கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில்,
இலங்கையில் தமிழ் சிறுபான்மை மக்கள் நிலைகுறித்து கடந்த ஜூலையில் தாங்கள் எழுதிய கடிதத்திற்கு பெரிதும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இலங்கை அதிபருடன் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் தூது குழுவும் என்னை சந்தித்து பேசியது.
இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கெளரவத்துடனும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உறுதியாக மேற்கொள்ளும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் விரைவில் குடியமர்த்தப்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு வலியுறுத்தும்.
இதற்காக இந்திய அரசு ஏற்கனவே ரூ. 500 கோடி நிதியுதவி அளிக்க உறுதி அளித்துள்ளது. மேலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 வீடுகளை கட்டித் தருவதற்கு உதவி அளிக்கவும் இந்தியா உறுதி அளித்திருக்கிறது.
மேலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து அவர்களிடம் பொருளதாரரீதியாக இயல்பு நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்து கொள்கிறேன்.
மேலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் அரசியல்ரீதியாக இனப் பிரச்சனைக்கு தீர்வு காண உங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல்:
இந் நிலையி் இலங்கையில் மணல் திருட்டை தடுக்க முயன்ற தமிழர்கள் மீது சிறப்பு அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், தாழங்குடா அருகேயுள்ள வேடர் குடியிருப்பு கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் மணல் திருட்டு நடைபெற்று வந்ததாகவும், இதைத் தடுக்க முயன்ற தமிழர்கள் மீது சிறப்பு அதிரடிப் படையினரும் அவர்களுடன் இணைந்து செயல்படும் டிஎம்விபி கட்சியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மணல் திருட்டில் ஈடுபட்ட இரு வாகனங்களை அப்பகுதி தமிழ் மக்கள் சூழ்ந்து கொண்டு வழிமறித்ததால், ஆத்திரமடைந்த சிறப்பு அதிரடிப்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications