நித்தியானந்தாவுடன் நான் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை-ரஞ்சிதா வாக்குமூலம்

சாமியார் நித்தியானந்தாவின் படுக்கை அறையில் அவருக்கு பல்வேறு 'சேவைகளை' செய்து, தலைமறைவான ரஞ்சிதா இன்னும் எங்கிருக்கிறார் என்பது 'யாருக்குமே' தெரியவில்லை. தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூரிலிருந்து ஒரு சிஐடி போலீஸ் குழு, சென்னைக்கு ரகசியமாக வந்து ரஞ்சிதாவை சந்தித்து வாக்குமூலம் பெற்றுள்ளது. இந்த வாக்குமூலத்தை போலீஸார் கர்நாடக உயர்நீதி்மன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நித்தியானந்தாவுடன் நான் செக்ஸ் உறவு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் உண்மையல்ல - போலியாக சித்தரிக்கப்பட்டவை. ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே நித்தியானந்தாவின் அறைக்கு நான் சென்று இருக்கிறேன் எனக் கூறியுள்ளார் ரஞ்சிதா.
இந்த வாக்குமூலத்தில் நித்தியானந்தாவையும் ரஞ்சிதா மாட்டி விடவில்லை. தானும் தவறு செய்யவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அதேசமயம், ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் படுக்கை அறையில் அந்தரங்க காரியங்களில் ஈடுபட்டிருப்பது போன்ற காட்சிகள் உண்மையானவையே என்று தடயவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுதான் ரஞ்சிதா ஒரு உத்தமி, சிறந்த பக்தை என்று உணர்ச்சிவசப்பட்டு நித்தியானந்தா பேட்டி அளித்த வீடியோ வெளியானது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது ரஞ்சிதா கொடுத்த வாக்குமூல விவரமும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications