ஆஸி. தேர்தல்: முக்கிய பிரச்சனையான வெளிநாட்டினர் விசா!
வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதைக் குறைக்க வேண்டும், உள்நாட்டினருக்கே வேலைவாய்ப்புகளில் முதலிடம் தர வேண்டும் என்று முக்கிய எதிர்க் கட்சியான லிபரன் கட்சி கோரி வருகிறது. அதையே தனது பிரச்சாரத்தில் முக்கியமான விவாதப் பொருளாகவும் முன் வைத்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விசாவின் எண்ணிக்கையை 3 லட்சத்தில் இருந்து 1.7 லட்சமாக குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவரின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையே தனது தேர்தல் ஆயுதமாக்கியுள்ளது லிபரல் கட்சி.
ஆஸ்திரேலியாவில் கல்வியை ஆளும் கட்சி விற்று வருகிறது. இதை நாங்கள் ஆதரித்தாலும் வெளிநாட்டவருக்கு அதிகமான விசா வழங்கப்படுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று அக் கட்சியின் தலைவர் டோனி அபோட் கூறினார்.
இதை சமாளிக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சியும் விசாக்களைக் கட்டுப்படுத்துவோம் என்று பேச ஆரம்பித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு கல்வி, பணிக்காக செல்வோரில் சீனர்கள், இந்தியர்களே மிக அதிகம்.
இப்போது விசாக்களை குறைப்போம் என்று அந்நாட்டு கட்சிகள் அறிவித்துள்ளது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.