பெண்ணின் அடிவயிற்றில் கத்தரிக்கோள்: விசாரணைக் குழு அறிக்கை
திருப்பூர்: கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்யும் போது பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய பி. நடராஜன் தலைமையிலான மருத்துவக் குழு தனது அறிக்கையை நேற்று அரசிற்கு அனுப்பி வைத்துள்ளது.
அவிநாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் அந்த பெண்ணின் கர்ப்பப்பையை அகற்ற நடந்த அறுவை சிகிச்சையின் போது தான் கத்தரிக்கோளை வயிற்றுக்குள் வைத்திருக்கக்கூடும் என்று அந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,
அவிநாசி அரசு மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை கடந்த 4 மாதங்களுக்கு முன் நடந்தது. வயிற்றுக்குள் கத்தரிக்கோள் வைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
அந்த தனியார் மருத்துமனை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது நோயாளியின் வயிற்றில் இருந்து கத்தரிக்கோள் எடுக்கப்பட்ட சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினார்.
சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நடராஜன் தெரிவித்தார்.