டெல்லி நகருக்குள் நுழைந்தது யமுனை ஆற்று வெள்ளம்-நகரம் மிதக்கிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலைநகர் டெல்லிக்குள் யமுனை ஆற்று வெள்ளம் நுழைந்துள்ளது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் மிதக்க ஆரம்பித்துள்ளன.
அபாய அளவைத் தாண்டி 92 செமீ அளவுக்கு யமுனையில் வெள்ளம் ஓடிக் கொண்டுள்ளது. இதையடுத்து வெள்ள நீர் டெல்லி நகரின் தாழ்வான பகுதிகளில் நுழைந்துள்ளது. யமுனா பஜார், உஸ்மான்பூர் ஆகிய பகுதிகள் நீரில் மிதக்கின்றன.
யமுனையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஹரியானா மாநிலம் ஹதினி குந்த் அணையிலிருந்து விநாடிக்கு 70,000 கன அடி நீர்திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
கடந்த புதன்கிழமை முதல் ஹரியானாவிலிருந்து 10 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications