சென்னையில் பன்றிக் காய்ச்சல்-அரசு உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பலி

Subscribe to Oneindia Tamil

Chennai
சென்னை: தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கோவையில் ஒரு வங்கி அதிகாரி உயிரிழந்த நிலையில் சென்னையில் இன்று தமிழக அரசில், உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழக அரசில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மோகனவேல் (39). இவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியது. இதையடுத்து அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்ததாக அரசு மருத்துவமனை டீன் மோகனசுந்தரம் தெரிவித்தார்.

முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் மோகனவேல். சில நாட்களுக்கு முன்புதான் இங்கு கொண்டு வரப்பட்டார் என்றும் மோகனசுந்தரம் தெரிவித்தார்.

கடந்த வாரம்தான் கோவையில் 48 வயதான தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் துணைப் பொது மேலாளர் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+