திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா துவங்கியது : நவ. 21ல் மகா தீபம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. வரும் 21-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
திருவண்ணாமலை என்றாலே நம் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான். தான் என்ற அகந்தையை அழிப்பதற்காக சிவபெருமான் திருவண்ணாமலையில் அக்னி மலையாக தோன்றியதாக ஐதீகம். ஆகையால் மக்கள் மலையையே சிவபெருமானாக பாவித்து பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருகின்றனர்.
திருவண்ணாமலையில் சிவபெருமான் அக்னி மலையாகத் தோன்றியதால் அங்கு கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் காரத்திகை தீப திருவிழா நேற்று துவங்கியது. இது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவசம் அணிவித்து அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன.
இதைத் தொடர்ந்து விநாயகர், முருகர், உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தங்க கொடிமரத்தின் அருகே எழுந்தருளினர்.
கொடியேற்றமத்தைத் தொடர்ந்து கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. நேற்று காலை பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமான வாகனங்களில் மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவில் பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், அதிகார நந்தி, ஹம்சம், சின்ன ரிஷப வாகனங்களில் வீதியுலா வந்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் வரும் 17-ம் தேதியும், தேரோட்டம் 18-ம் தேதியும் நடைபெறுகிறது.
திருவிழாவின் இறுதி நாளான 21-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2, 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இந்த மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications