பக்ரீத்-தமிழகத்தில் முஸ்லீம்கள் சிறப்பான கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஈத் உல் அஸா எனப்படும் பக்ரீத் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அன்பு, பரிவு ஆகியவற்றை நிலைநிறுத்தும் பண்டிகையாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு தொழுகைகள் நாடு முழுவதும் நடைபெற்றன.
தமிழகத்திலும் பக்ரீத் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மசூதிகள், ஈத்காக்களில் காலையில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. பின்னர் குர்பானி கொடுத்து பண்டிகையை முஸ்லீம்கள் கொண்டாடினர்.
தலைநகர் சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் கொண்டாடப்பட்டது.
சில இடங்களில் குர்பானிக்காக ஒட்டகங்களும் வரவழைக்கப்பட்டு அவை பலி கொடுக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications