ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு-25ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூர் தனி கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது. நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த வழக்கு.
பலமுறை இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பில் வாய்தா வாங்கப்பட்டுள்ளது. கடைசியாக, வழக்கு ஆவணங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பில் பிழைகள் இருக்கிறது. எனவே அதை ரத்து செய்து விட்டு மீண்டும் மொழிபெயர்க்க உத்தரவிடக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை முடிந்து, தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது. இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி பெங்களூர் தனிக்கோர்ட்டில் சாட்சிகள் மறுவிசாரணை தொடங்கியது. அப்போது தனிக்கோர்ட்டில் ஒருவர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
பெங்களூர் தனிக்கோர்ட் நேற்று மீண்டும் கூடியது. நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் அரசு வக்கீல் ஆச்சார்யா, ஜெயலலிதா வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜரானார்கள்.
அப்போது, ஜெயலலிதாவின் மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் வருகிற திங்கட்கிழமை தீர்ப்பு வழங்குவதாக கூறியுள்ளது. எனவே இங்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா வக்கீல் கோரினார்.
இதையடுத்து 25ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications