கச்சத்தீவு அருகே நடுக் கடலில் தத்தளித்த 8 மீனவர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே படகு மூழ்கிப் போனதால் நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 தமிழக மீனவர்களை, சக மீனவர்கள் இன்று பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர்.
இந்த மீனவர்கள் எட்டு பேரும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்னம் அருகே உள்ள அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர்கள். சனிக்கிழமை இவர்கள் கடலுக்குள் சென்றனர். கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் அதில் சிக்கி இவர்களின் படகு மூழ்கியது.
இதையடுத்து எட்டுமீனவர்களும் கச்சத்தீவு அருகே நடுக் கடலில் சிக்கிக் கொண்டனர். இந்த நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து சென்ற மீனவர் குழு ஒன்று இவர்களைப் பார்த்து விரைந்து சென்று மீட்டு கரை சேர்த்தது.
மீட்கப்பட்ட மீனவர்கள் எட்டு பேரும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications