சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் மாஜி அமைச்சர்கள் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி விடுதலை
மதுரை: சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 1991 - 96ல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டு கூரை ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. வழக்கு குறித்த முக்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகன்நாதன் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்வதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்த சத்தியமூர்த்தி, ஆச்சாரியலு உள்பட 8 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இவ்வழக்கில் மொத்தம் 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் குமார், ராமசாமி ஆகியோர் இறந்துவிட்டனர்.
இதில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சம்பத்தை, வழக்கில் இருந்து விடுவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த சுடுகாட்டு கொட்டகை ஊழல் விவகாரத்தை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தவர் உமா சங்கர் ஐ.ஏ.எஸ். என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விடுதலையாகியுள்ள செல்வகணபதி தற்போது திமுகவில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications