பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்களில் டெல்லி முதலிடம்: 2வது இடத்தில் பெங்களூர்

Subscribe to Oneindia Tamil

Delhi
டெல்லி: பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத மெட்ரோக்களில் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய தலைநகரில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன.

கடந்த ஆண்டு இந்தியாவின் 35 பெரு நகரங்களில் 3,43,749 குற்றங்கள் நடந்துள்ளன. இதில் 13. 2 சதவிகிதத்துடன் டெல்லி முதலிடத்தில் உள்ளது. மேலும், 9.4 சதவிகிதம், 9.1 சதவிகிதத்துடன் பெங்களூர், மும்பை இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன.

தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் 2009ல் இந்தியாவில் நடந்த குற்றங்கள் குறித்து அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2009-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 1, 696 கற்பழிப்புகள் நடந்துள்ளன. இதில் டெல்லியில் மட்டும் 404 நடந்துள்ளன. மேலும் நாட்டில் நடந்த 3 ஆயிரத்து 544 குழந்தைகள், பெண்கள் கடத்தலில் டெல்லியில் ஆயிரத்து 379 நடந்துள்ளன.

நாடு முழுவதும் நடந்த 684 வரதட்சனை கொலைகளில் 104ம், பெண்களைத் தொந்தரவு செய்த வழக்குகளில் 3, 477ல் 491 டெல்லியில் தான் நடந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+