வெளியூர் போகவிருப்பதால் பிறந்த நாள் வாழ்த்துக் கூற வராதீர்கள்-அழகிரி
மதுரை: எனது பிறந்த நாளான ஜனவரி 30ம் தேதி நான் வெளியூர் போகவிருப்பதால் வாழ்த்து கூற யாரும் வர வேண்டாம் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
இதுகுறித்து அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 30ம் தேதியன்று எனது 60வது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பணியின் காரணமாக வெளியூர் செல்ல இருப்பதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டாம்.
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் அன்னதானம், நலதிட்ட பணிகள் வழங்குதல் உள்ளிட்டவை மாவட்ட கழகம், பகுதி ஒன்றியங்கள் சார்பில் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக அழகிரியின் பிறந்த நாளன்று மதுரையில் உள்ள அவரது வீடு திமிலோகப்படும். அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முதல் ஆதரவாளர்கள் வரை அனைவரும் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
ஆனால் இந்த முறை தான் வெளியூர் போகப் போவதாகவும், யாரும் வர வேண்டாம் என்றும் கூறியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications