சட்டசபை வளாகத்தில் கள் விற்பனை: கள் இயக்கம் அறிவிப்பு
கோவை: தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் தமிழக சட்டசபை வளாகத்தில் கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு,
கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கும் வகையில் நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமையிலான குழுவின் அறிக்கையை வெளியிட தமிழக அரசு மறுத்து வருகிறது.
மேலும், தமிழக சட்டசபை இடைக்கால நிதிநிலை கூட்டத் தொடரின் போது மக்களின் நலன் கருதி அரசு கொண்டிருக்கும் மது கொள்கை மற்றும் மதுவிலக்கில் மாற்றங்கள் பற்றிய அறிவிப்பு இருக்கும் என கள் இயக்கம் நம்புகின்றது.
எனவே, ஏற்கனவே அறிவித்தபடி சட்டசபை வளாகத்தில் கள் விற்கப்படும்.
அதன்படி பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும், அரசுக்கும், காவல்துறைக்கும் இடையூறு இல்லாமல் கள் விற்பனை செய்யப்படும்.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் கொங்கு மண்டல அமைப்பாளரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசகருமான பி.கே. ராமசாமி சட்டசபை வளாகத்தில் வரும் 10ம் தேதி காலை 11 மணிக்கு கள் விற்பனை செய்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications