கோடியக்கரை கடலில் 3 மீனவர்கள் மாயம்: கவலையில் மீனவர்கள் குடும்பங்கள்
நாகை: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 3 பேரைக் காணவில்லை. அவர்கள் கதி என்ன என்று தெரியாததால் அவர்கள் குடும்பத்தார் கவலை அடைந்துள்ளனர்.
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (36).மீனவர்.அவரது சொந்த படகில் அவரும், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குமரவேல்(30), ஜெயராமன்(55) ஆகியோர் கடந்த 9-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் 3 பேரும் கோடியக்கரையில் இருந்து புறப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று காலையில் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. இதையடுத்து நேற்று மாலை 10 படகுகளில் 10-க்கும் மேற்பட்ட அப்பகுதி மீனவர்கள் காணாமல் போனவர்களைத் தேடச் சென்றனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இதனால் அக்கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர். 3 மீனவர்கள் காணாமல் போயிருப்பதால் ஆறுகாட்டுதுறை மீனவர்கள் 1000 பேர் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இந்த சம்பவம் குறித்து மீன்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications