For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோடியக்கரை கடலில் 3 மீனவர்கள் மாயம்: கவலையில் மீனவர்கள் குடும்பங்கள்

By Siva
Google Oneindia Tamil News

நாகை: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 3 பேரைக் காணவில்லை. அவர்கள் கதி என்ன என்று தெரியாததால் அவர்கள் குடும்பத்தார் கவலை அடைந்துள்ளனர்.

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (36).மீனவர்.அவரது சொந்த படகில் அவரும், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குமரவேல்(30), ஜெயராமன்(55) ஆகியோர் கடந்த 9-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் 3 பேரும் கோடியக்கரையில் இருந்து புறப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று காலையில் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. இதையடுத்து நேற்று மாலை 10 படகுகளில் 10-க்கும் மேற்பட்ட அப்பகுதி மீனவர்கள் காணாமல் போனவர்களைத் தேடச் சென்றனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

இதனால் அக்கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர். 3 மீனவர்கள் காணாமல் போயிருப்பதால் ஆறுகாட்டுதுறை மீனவர்கள் 1000 பேர் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இந்த சம்பவம் குறித்து மீன்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

English summary
3 fishermen from Arukattuthurai near Vedaranyam who went to sea are missing. The other fishermen who went to search the missing returned in vain. This incident has been reported to fisheries department officals and coastalguard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X