நிலத்தகராறில் விவசாயியைக் கொன்ற 5 வாலிபர்களுக்கு ஆயுள்தண்டனை
நெல்லை: நெல்லையில் நிலதகராறில் விவசாயியை கொன்ற 5 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை டவுன் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் செல்லப்பா. விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் சுந்தரர் தெருவைச் சேர்ந்த ஸ்ரீரங்கதேவர் என்பவர் தண்ணீர் பாய்ச்சி வந்தார். திடீரென அவர் இறந்து விட்டதை அடுத்து செல்லப்பா அந்த நிலத்தை வேறொவருக்கு விற்க முயன்றார். இதை அறிந்த ஸ்ரீரங்கதேவர் மகன் ஐயப்பன் என்பவர் நிலத்தை விற்க எதிர்ப்பு தெரிவித்து அவருடன் தகராறு செய்தார். ஆனால் அதையும் மீறி செல்லப்பா தனது நிலத்தை விற்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன் அவரது கூட்டாளிகள் டவுன் ராஜபாண்டி மகன் மணி, செய்துநங்கநல்லூர் திருமலை மகன் சுப்பிரமணியன், சிஎன் கிராமம் நயினார் மகன் முருகன், டவுன் வயல் தெரு வேல்தேவர் மகன் மாரி என்ற மாரியப்பன் ஆகியோர் சேர்ந்து கடந்த 12-1-2008 அன்று செல்லப்பாவை வெட்டிக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக டவுன் போலீசார் ஐயப்பன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை 2வது விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி கமலா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 5 பேருக்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications