நெல்லை அருகே பயங்கரம்-மாஜி எஸ்ஐ மகன் வெட்டிக்கொலை: ஒருவர் கைது
நெல்லை: பாளையங்கோட்டை அருகேயுள்ள திம்மராஜாபுரத்தில் வைக்கோல் படப்பு வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மாஜி எஸ்ஐ மகன் வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பாளை அருகே உள்ள திம்மராஜாபுரம் ஆண்டாள் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி. ஓய்வு பெற்ற எஸ்ஐ. இவரது மகன்கள் லட்சுமண குமார், மகேஷ். அதே தெருவில் உள்ள புறம்போக்கு இடத்தில் வைக்கோல் படப்பு வைப்பது தொடர்பாக இசக்கிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பழனி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று மகேஷ் வைக்கோல் படப்புக்கு சென்று வி்ட்டு திரும்பியபோது பழனி அவரை வழிமறித்து தகராறு செய்தார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே பழனி அவரை சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க வந்த லட்சுமண குமாருக்கும் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் வழியிலேயே மகேஷ் இறந்தார். இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications