திமுக-காங். பேச்சு தோல்வி?-கருணாநிதியை மீண்டும் சந்திக்காமல் கிளம்பினார் குலாம்

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பெரும் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடமே இதில் தலையிட்டது. சோனியா காந்தியின் உத்தரவுப்படி டெல்லியிலிருந்து குலாம் நபி ஆசாத் நேற்று இரவு சென்னை விரைந்து வந்தார்.
முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் கருணாநிதியுடன் இரவு 9 மணிக்குத் தொடங்கி கிட்டத்தட்ட 3 மணி நேரம் பேச்சு நடத்தினார் ஆசாத். இருப்பினும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்ததையின்போது திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் தங்கபாலுவும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதியிடம் என்ன உடன்பாடு ஏற்பட்டது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நாளை (அதாவது இன்று)மீண்டும் பேசுவார்கள் என்றார்.
இதையடுத்து இன்று இருவரும் மீண்டும் சந்தித்துப் பேசும்போது சிக்கலுக்குத் தீர்வு கண்டு, உடன்பாட்டை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று முதல்வர் கருணாநிதியை, குலாம் நபி ஆசாத் சந்திக்கவில்லை. மாறாக அவர் டெல்லிக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்.
சென்னை விமானநிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து கேட்டபோது நேற்று நீண்ட நேரம் முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினேன். நேற்று நடந்த பேச்சு விவரங்களை கட்சித் தலைமையிடம் தெரிவிப்பேன். மீண்டும் ஒருமுறை பேச்சு நடத்தும் வாய்ப்பு உள்ளது என்றார்.
அதற்கு மேல் செய்தியாளர்கள் விரிவாக கேள்விகள் கேட்க முயன்றபோது அதற்குப் பதிலளிக்க மறுத்து விட்டார் ஆசாத்.
காங்கிரஸ் மேலிடத்தின் பிரதிநிதியாகவே சென்னை வந்திருந்தார் குலாம் நபி ஆசாத். எனவே, நிச்சயம் உடன்பாடு கண்டு அதில் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்தது. ஆனால் ஆசாத் திடீரென டெல்லி கிளம்பிச் சென்றதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவே கருதப்படுகிறது.
இதனால் திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் பெரும் இடியாப்பச் சிக்கலாகியுள்ளதாக தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications