63 தொகுதிகள் எவை எவை?: திமுக-காங்கிரஸ் இடையே மீண்டும் இழுபறி!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சண்டை, சச்சரவுகளுக்குப் பின் 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவை எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது.
இன்று இந்த இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரும் இரண்டு முறை சந்தித்துப் பேசியும், முதல்வர் கருணாநிதியை காங்கிரஸ் குழுவினர் சந்தித்த பின்னரும் தொகுதிகளை இறுதி செய்ய முடியவில்லை.
காங்கிரசுக்கான தொகுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் எம்எல்ஏ ஆகியோ் அடங்கிய ஐவர் குழு இன்று சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து ஆலோசனை நடத்தியது.
அப்போது ஒவ்வொரு காங்கிரஸ் கோஷ்டியும் தங்களுக்குத் தேவையான தொகுதிகள் பட்டியலை இந்தக் குழுவிடம் நீட்டி, அந்தத் தொகுதிகளைப் பெறுமாறு கோரின.
இதையடுத்து எந்தெந்தத் தொகுதிகளை கேட்பது என்பது குறித்து ஆலோசித்து முடித்த ஐவர் குழு காலை 10.45 மணிக்கு அண்ணா அறிவாலயத்துக்கு வந்தது. அவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ்-திமுக குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தின. திமுக சார்பில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முதல்வருடன் சந்திப்பு:
சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு இரு குழுவினரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சுவார்த்தை விவரங்களை எடுத்துரைத்தன.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளை இனம் காணுவது குறித்து ஐவர் குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. மீண்டும் இன்று மாலை சந்தித்துப் பேசுவோம். இன்று இரவுக்குள் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இனம் காணப்பட்டுவிடும் என்றார்.
மாலையில் மீண்டும் சந்திப்பு:
இதையடுத்து காங்கிரஸ் குழுவினர் மாலை 6 மணிக்கு மீண்டும் அறிவாலயம் வந்து திமுக குழுவினரை சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இதையடுத்து இன்று இரவே காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்றுக் கொள்வதில் காங்கிரசுக்கும் காங்கிரஸ் கோரும் தொகுதிகளைத் தருவதில் திமுகவுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.
2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 48 கடந்த தொகுதிகளில் பெரும்பாலானவற்றை மீண்டும் அந்தக் கட்சிக்கு திமுக ஒதுக்க முன் வந்துள்ளதாகவும், மீதமுள்ள 15 தொகுதிகளுக்கு மட்டுமே இப்போது திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிகிறது.
ஆனால், இந்த 15 இடங்களில் காங்கிரசுக்கு தாங்கள் பலவீனமாக உள்ள கொங்கு மண்டலத்திலும், நகர்ப் பகுதிகளிலும் அதிக இடங்களை திமுக ஒதுக்கியதால் சிக்கல் எழுந்ததாகக் கூறப்படுகிறது.
அதே போல வட மாவட்டங்களில் காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. வட மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது. மேலும் பாமக, விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இந்த மாவட்டங்களில் அதிக இடங்களை திமுக ஒதுக்கியாக வேண்டும்.
இதனால் வட மாவட்டங்களில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் தர திமுக மறுத்துள்ளது. தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலத்திலும் தான் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை திமுக ஒதுக்குவதாகத் தெரிகிறது.
இதை காங்கிரஸ் ஏற்க மறுப்பதால் மீண்டும் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் இரு கட்சியினரும் நாளை மீண்டும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications