பாமாயில் ஊழல் வழக்கில் உம்மன் சாண்டிக்கு தொடர்பு?-மீண்டும் விசாரணை
திருவனந்தபுரம்: கேரளாவில் பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் எதிர்கட்சித் தலைவர் உம்மன் சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கருணாகரன் ஆட்சிகாலத்தில் நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளியான அப்போதைய உணவுத் துறை அமைச்சர் முஸ்தபா சமீபத்தில் திருவனந்தபுரம் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
பாமாயில் இறக்குமதி குறித்து அப்போது நிதியமைச்சராக இருந்த உம்மன் சாண்டிக்கு தெரியும். ஆனால் அவர் வழக்கில் சேர்க்கப்படவில்லை. எனவே, என்னையும் விடுவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வருவதால் இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி கொண்ட இடதுசாரி அரசு உடனடியாக லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது.
அதில் பாமாயில் இறக்குமதி குறித்து உம்மன் சாண்டிக்கு தெரியும் என்று முஸ்தபா கூறியிருப்பதால் பாமாயில் ஊழல் வழக்கில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம். எனவே, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து உம்மன் சாண்டி கூறுகையில்,
இந்த வழக்கி்ல் நான் குற்றவாளியாக சேர்க்கப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறிதது காங்கிரஸ் உயர்மட்ட குழுவிடம் தெரிவித்து விட்டேன். இந்த ஊழல் புகார் தேர்தலில் காங்கிரஸுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த ஆளும் கட்சியினர் செய்த சதி என்றார்.
இது குறித்து அச்சுதானந்தன் கூறுகையில், பாமாயில் ஊழல் வழக்கில் எதிர்கட்சித் தலைவரின் பங்கு குறித்து விசாரணையில் தெரிய வரும், இந்த வழக்கு தற்போது தான் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications