மொஹாலி மைதானத்தில் இந்தியா, பாக். மோதலைப் பார்த்தார் கிலானி
Subscribe to Oneindia Tamil

போட்டியைக் காண்பதற்காக சண்டிகர் வந்த கிலானிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்குப் பின்னர் தாஜ் ஹோட்டலுக்குச் சென்றார் கிலானி. பின்னர் அங்கிருந்து மொஹாலி மைதானம் வந்தடைந்தார். அங்கு அவரை பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்றார்.
முன்னதாக சண்டிகர் கிளம்பும் முன்பு இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கிலானி பேசுகையில், அரை இறுதிப் போட்டியைப் பார்க்க என்னை அழைத்தமைக்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த மாபெரும் போட்டியைக் காண ஆவலாக உள்ளேன். இந்தப் போட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
இன்று இரவு மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கிலானி மற்றும் பாகிஸ்தான் குழுவினருக்கு இரவு விருந்து அளித்துக் கெளரவிக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications