பிஏசி அறிக்கையை சபாநாயகரிடம் தாக்கல் செய்தார் ஜோஷி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 15.1.2008ம் தேதி பிரதமர் மன்மோகனுக்கு நான் கடிதம் ஒன்றை அனுப்பினேன். அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான நுழைவுக் கட்டணம் பற்றி நான் எதுவும் தெரிவிக்கவில்லை, பயன்பாட்டுக் கட்டணம் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தேன்.
இதை சராசரி அறிவுள்ள ("average intelligence") எவரும் கவனத்தில் கொள்ள முடியும். ஆனால், முரளி மனோகர் ஜோஷியின் அறிக்கையில் 2008ல் பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தில் கூறப்பட்ட விஷயங்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளன.
மாறாக நான் இந்த விஷயம் முடிந்தபோன விஷயம் (matter as closed) , இதை இத்துடன் விட்டுவிடலாம் என்று பிரதமரிடம் கூறியதாக தவறான வகையில் குறிப்பிட்டுள்ளார் ஜோஷி.
அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் விற்பனை மூலம் கூடுதலாக அரசுக்கு பணம் ஈட்டுவது எப்படி என்று நான் எனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 3 யோசனைகளை ஜோஷி திட்டமிட்டு மறைத்துள்ளார்.
ஜோஷியின் வரைவு அறிக்கையில் என்ன விஷயம் இடம் பெற வேண்டுமோ அது இடம் பெறவில்லை. ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களுக்கு முறையாக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, நிதி அமைச்சர் என்ற முறையில் நான் தெரிவித்த யோசனைகள் எல்லாம் குறிப்பிடப்படவில்லை.
ஸ்பெக்ட்ரம் என்பது மிகவும் அரியதானது, அதனால் அதன் மதிப்பை உணர்ந்து விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். இதையெல்லாம் ஜோஷி வேண்டுமென்றே மறைத்துவிட்டு அறிக்கையை தயார் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இதே விவரங்களை நிருபர்களிடமும் சிதம்பரம் விளக்கினார். அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எனக்கு நேரடித் தொடர்பு என்று முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறியதற்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்? என்றார்.
"சராசரி அறிவுள்ள எவரும் என் கருத்தைப் புரிந்து கொள்வர்'' என்று நீங்கள் கூறியது, முரளி மனோகர் ஜோஷியைக் குறிப்பிடுவதாக கருதலாமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, நான் அப்படி கூறவில்லை. என்னை போல சராசரி ஆள் புரிந்து கொள்ளலாம் என்று என்னையே நான் கூறிக் கொண்டேன் என்றார் பதிலடியாக.
அறிக்கையை சபாநாயகரிடம் தந்த ஜோஷி:
இந் நிலையில் தனது அறிக்கையை மக்களவை சபாநாயகர் மீரா குமாரிடம் முரளி மனோகர் ஜோஷி இன்று தாக்கல் செய்தார்.
ஜோஷி தலைமையிலான பிஏசி குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications