வெயிலால் வந்த கிராக்கி-இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு

Subscribe to Oneindia Tamil

Tender Coconut
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் சுட்டெரிக்கிறது. உடலை குளிர்ச்சியூட்டும் இயற்கை பானங்களான இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கோடை தொடங்கியதிலிருந்தே வெயில் வருத்தெடுக்கிறது. சில பகுதிகளில் மழை எட்டி பார்த்தாலும் மாநகரை ஒட்டிய பகுதிகளை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கிறது.

இதனால் வெயிலின் உக்கிரம் தாக்காமல் வெளியில் நடமாடவே மக்கள் அஞ்சும் நிலை உள்ளது. உடல் சூட்டை தணித்து கொள்ள பழங்களையும், குளிர்பானங்களையும் விரும்பி வாங்கி உள்கொள்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பழங்களின் விலை தறுமாறாக உயர்ந்துள்ளது. எந்த சீசனிலும் குறைந்தவிலைக்கு கிடைக்கும் வாழை பழங்கள் கூட தற்போது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. வயல் வாழைப்பழம் ஒன்று ரூ.4 வரை விற்கிறது. ரூ.5க்கு கிடைத்த செவ்வாழையின் விலை இரட்டிடப்பாகிவிட்டது. பச்சை பழம் கிலோ ரூ.25 வரை விற்கப்படுகிறது. கற்பூரவள்ளி, நேத்திரம் உள்ளிட்ட சில ரகங்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கை பானங்களான இளநீர், பதனீரை மக்கள் நாடி செல்கின்றனர். தற்போது அவற்றுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இளநீர் உற்பத்தி குறைந்ததால் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரூ.10க்கு கிடைத்த இளநீர் ரூ.15க்கும், ரூ.20க்கும் விற்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+