மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் குடிபோதையில் இருந்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் பணியின் போது போதையில் இருந்த சப் - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை ஆண்டாள்புரத்தில் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்குதிருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த வாக்குப் பெட்டிகள் இங்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பாதுகாப்பு பணியில் தெப்பக்குளம் எஸ்.ஐ. செல்வம் ஈடுபட்டிருந்தார். அங்கு திடீரென கீரத்துரை இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆய்வு செய்ய வந்தார். அப்போது, பணியின் போது செல்வம் குடிபோதையில் இருந்ததை புருஷோத்தமன் கண்டறிந்தார்.
இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் இது குறித்து மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் எஸ்.ஐ. செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications