நோய்டா விவசாயிகள் போராட்டம் ஆக்ராவுக்குப் பரவியது-மோதலில் 4 பேர் காயம்
டெல்லி: 3 பேரைப் பலி கொண்ட உ.பி. மாநிலம் நோய்டாவில் ஏற்பட்ட விவசாயிகள் போராட்டம் தற்போது ஆக்ராவுக்குப் பரவியுள்ளது. அலிகாருக்கும் அது பரவியுள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
நேற்று நோய்டாவில் வி்வசாயிகள் நடத்திய மாபெரும் போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்தது. போலீஸார் நடத்திய துபாபாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையி்ல தற்போது போராட்டம் ஆக்ரா, அலிகார் ஆகிய நகரங்களுக்கும் பரவியுள்ளது.
டெல்லி அருகே உள்ளது நோய்டா. இங்கு நகர வளர்ச்சிக்காக விவசாயிகளின் நிலங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் அதற்குரிய விலை தரப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இது பெரும் கலவரமாக மாறியது. துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தகவலை பார்த்து, படித்த ஆக்ரா மற்றும் அலிகார் விவசாயிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று அலிகாரிலும், ஆக்ராவிலம் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நோய்டாவுக்கும் விவசாயிகள் விரைந்து வந்து அங்குள்ள விவசாயிகளுடன் போராட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவர்கள் நோய்டா நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஆக்ராவில் போராட்டக்காரர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. ஜெனரேட்டர்கள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றின் மீது விவசாயிகள் தாக்குதல் நடத்தி தீவைத்தனர். இதில் நான்கு போலீஸார் காயமடைந்தனர்.
விவசாயிகள் போராட்டம் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். பதட்டமான பகுதிகளில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications