பாக். இறையாண்மையை அமெரிக்கா மீறியிருக்கக் கூடாது-கிலானி

அபோத்தாபாத்துக்குள் அதிரடியாக நுழைந்து, பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு அருகே வசித்து வந்த பின்லேடனை சுட்டு வீழ்த்தி பாகிஸ்தானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது அமெரிக்கா.
இந்த அதிர்ச்சியிலிருந்து பாகிஸ்தான் இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் செயல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறுகையில், பாகிஸ்தானை விட்டு விட்டு அல்லது பாகிஸ்தானைத் தாண்டிப் போய் இதை செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மீறியிருக்கக் கூடாது.
இரு நாடுகளிடையே நிலவி வரும் நல்லுறவை மனதில் கொண்டிருந்தால் அமெரிக்கா இதைச் செய்திருக்காது.
அமெரிக்காவின் செயல் எங்களது நாட்டுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க உளவு மற்றும் பாதுகாப்புத்துறையுடன் நாங்கள் நெருங்கி செயல்பட்டு வரும் நிலையில் அவர்கள் இதுபோல நடந்திருப்பது வருத்தம் தருகிறது என்றார் கிலானி.












Click it and Unblock the Notifications