6 ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடன், ஜவாஹிரி பிரிந்து விட்டனர்-அமெரிக்கா

இதுகுறித்து அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது...
ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடனை விட்டு ஜவாஹிரி பிரிந்து போய் விட்டார். மேலும் பின்லேடனை, ஜவாஹிரி ஓரம் கட்டி வைத்து விட்டார். மேலும் பின்லேடன் இயக்கத்திற்கு நிதி வருகையும் வெகுவாக குறைந்து போனதால், பின்லேடனை அவர் தவிர்க்க ஆரம்பித்து விட்டார்.
1988ம் ஆண்டு அல் கொய்தா அமைப்பை உருவாக்க பின்லேடனுக்கு உதவியாக இருந்தார் ஜவாஹிரி. மேலும் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் அல் கொய்தாவின் தாக்குதல்களை நடத்தியும் வந்தார் என்று அந்த பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
ஆனால் இதை அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாக இல்லை. இதுகுறித்து அமெரிக்க தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், அவர்கள் பிரிந்து விட்டார்கள் என்பது நம்பும்படியாகவே இல்லை. அப்படி ஒரு விஷயம் நடந்ததாக எங்களிடம் உளவுத் தகவல் எதுவும் இல்லை.
பின்லேடனுக்கு பல கடுமையான பிரச்சினைகள் இருந்தது உண்மைதான். ஆனால் ஜவாஹிரியும், அவரும் பிரிந்திருந்ததாக எங்களிடம் தகவல் இல்லை. அல் கொய்தா அமைப்புக்குப் பண வருகை வெகுவாக நின்று போனது உண்மைதான் என்றார்.
இருப்பினும் 2005ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்த போதுதான் ஜவாஹிரிக்கும், பின்லேனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த ஆண்டில், ஈராக்கில், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவரான அபு முசாப் அல் ஜர்காவி என்பனது தலைமையில் ஈராக் அல் கொய்தா உருவானது. இதன் பிறகுதான் பின்லேடனும், ஜவாஹிரியும் பிரிந்ததாக கூறப்படுகிறது. ஜவாஹிரியால் தனக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சியே அபோத்தாபாத்துக்கு பின்லேன் இடம் பெயர்ந்து வந்ததாகவும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications