காங்கேயத்தில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம்-தொழிலதிபர்கன் கைது

Subscribe to Oneindia Tamil

காங்கேயம்: காங்கேயத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த சூதாட்ட கிளப்பை போலீசார் சுற்றி வளைத்தனர்.

சூதாட்ட கிளப்

காங்கேயத்திற்கு அருகே உள்ளது வெள்ளரப்பாறை கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் குடில் அமைக்கப்பட்டு நாள்தோறும் சூதாட்டம் நடப்பதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.

அதனடிப்படையில், மாவட்ட எஸ்.பி ஏ. அருண் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சுற்றிவளைப்பு

காங்கேயம் விரைந்த தனிப்படை சம்பந்தப்பட்ட சூதாட்ட கிளப்பை சுற்றி வளைத்தது. அங்கு சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 54 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுள் பெரும்பாலானோர் காங்கேயம், வெள்ளக்கோவில், முத்தூர், நாமக்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

லட்சக்கணக்கில் பணம்

தொழிலதிபர்கள் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி விளையாடுவதும் தெரியவந்தது. சூதாட்ட கிளப்பில் இருந்து ரூ.15.67 லட்சம் பணம், 15 கார்கள் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காங்கேயம் போலீஸ் மீது நடவடிக்கை

மேற்படி சீட்டாட்ட கிளப் காங்கேயம் பகுதியில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்துள்ளது. ஆனாலும், இதை கண்டு கொள்ளாத உள்ளூர் போலீசார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி அருண் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+