டெல்லி: பாபர் மசூதி-ராம் ஜென்மபூமி அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இந்து, முஸ்லீம் அமைப்புகள் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் தொடங்குகிறது.
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி மற்றும் ராமர் ஜென்மபூமி ஆகியவை அமைந்துள்ள 2.77 ஏக்கர் நிலத்தை இரண்டு இந்து அமைப்புகள் மற்றும் ஒரு முஸ்லீம் அமைப்புக்கு சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்றும் அது தெரிவித்தது.
இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இந்து, முஸ்லீம் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் நாளை நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகின்றன.
நிர்மோகி அகாரா, அகில் பாரத ஹிந்து மகாசபா, ஜமாயத் உலமா இ ஹிந்த், சன்னி மத்திய வக்பு வாரியம் ஆகியவை இந்த அப்பீல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. அதேபோல பகவான் ராம் விரஜமான் சார்பிலும் மனு தாக்கல் செய்யபப்பட்டுள்ளது.
The Supreme Court will on Monday hear arguments in the Ramjanmbhoomi-Babri Masjid title suit in which a bunch of petitions have been filed by various Muslim and Hindu groups challenging the Allahabad High Court verdict. Expressing dissatisfaction over the High Court's verdict of dividing the 2.77 acre disputed site into three parts among Muslims, Hindus and Nirmohi Akhara, different religious groups have approached the apex court. A bench of justices Aftab Alam and R M Lodha will hear the appeals filed by Nirmohi Akhara, Akhil Bharat Hindu Mahasabha, Jamait Ulama-I-Hind and Sunni Central Wakf Board. A petition has also been filed on behalf of Bhagwan Ram Virajman.