வரலாறு காணாத வெயில்-நடமாட முடியாமல் மக்கள் ஸ்தம்பிப்பு

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கோடை வெயில் கொடி கட்டிப் பறக்கிறது. இப்படி ஒரு வெயிலை சமீப ஆண்டுகளில் பார்க்கவில்லை என்று கூறும் அளவுக்கு வெயில் மிகக் கடுமையாக உள்ளது. இப்போதே 108 டிகிரி என்ற அளவுக்கு சராசரியாக வெயில் வெளுத்துக் கட்டுகிறது.
மேலும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் சராசரியாக 100 டிகிரியைத் தாண்டி விட்டது வெயில். சென்னையில்தான் கடுமையாக உள்ளது வெயில்.
வெளியில் போகவே முடியவில்லை. அனல் காற்றாக வீசுகிறது. வாகனங்களை நிறுத்தி விட்டு போய் எடுத்தால் சுட்டுப் பொசுக்குகிறது. வீட்டிலோ நிலைமை இன்னும் மோசம். பேன் போட்டால் வெப்பக் காற்றுதான் வருகிறது. அதற்கு பேசாமல் சும்மா இருக்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு வெயில் மகா கொடுமையாக உள்ளது.
நள்ளிரவைத் தாண்டியும் கூட வெப்பமாக இருப்பதால் தூங்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாக நேரிடுகிறது. இது போதாதென்று அவ்வப்போது மின்வெட்டும் பட்டையைக் கிளப்புவதால் மக்கள் நிலை மகா கொடுமையாக உள்ளது.
ஏசி வைத்திருப்பவர்கள் சற்று நிம்மதி பெறுகிறார்கள். ஆனால் அந்த வசதி இல்லாதவர்கள் பாடுதான் பெரும் கொடுமையாக உள்ளது.
குளிர்பானங்கள், சர்பத், கரும்புச் சாறு, தர்பூஸ் என தாகம் தணிக்கவும், குளுமை பெறவும் மக்கள் ஓடுவதை அதிகம் காண முடிகிறது.
ஏதாவது கோடை மழை வந்தால்தான் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட முடியும் என்ற நிலையில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications