சிகரெட் லைட்டரைப் பற்ற வைத்தபோது வெடித்து வாலிபர் காயம்
திருவனந்தபுரம்: கேரளாவில் சிகரெட் லைட்டர் வெடித்து சிதறியதில் வாலிபர் வாலிபரின் கை விரல்கள் துண்டானது.
கேரளாவில் இடுக்கி அருகே உள்ள பழயரிக்கண்டம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள கஞ்சிக்குழி பகுதியில் நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் ஒரு சிகரெட் பாக்கெட்டும், சிகரெட் லைட்டரும் கிடந்தன. அதை எடுத்து ஆளுக்கு ஒரு சிகரெட்டை பற்ற வைக்க முயன்றனர்.
சிகரெட் லைட்டரை சந்தோஷ் எடுத்து அழுத்தியதும் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதில் சந்தோஷின் வலது கை, மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. கையில் இரண்டு விரல்கள் துண்டாகின.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சந்தோஷ் உடனடியாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் குறித்து இடுக்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகரெட் லைட்டர் வெடிகுண்டு போல் வெடித்த சம்பவம் கேரள போலீசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications