ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு-விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வரும் மே 30ம் தேதிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

1991-96ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனையா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தசாமி, இந்த வழக்கில் ஆஜராகி வந்த மூத்த வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தமிழக அட்வகேட் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், அவரால் இந்த வழங்கில் ஆஜராகி வாதாட முடியவில்லை. எனவே ஜெயலலிதா சார்பில் வாதாட புதிய வழக்கறிஞர் நியமிக்க கால அவகாசம் வேண்டும் என்றார்.

இதற்கு அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து விசாரணையை மே 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+