இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்

இந்த முறை இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.
கடந்த இடதுசாரிக் கூட்டணி ஆட்சியின்போது அச்சுதானந்தன் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் ஜோசப். இந்த நிலையில் கடந்த 2007ம் ஆண்டு சென்னையிலிருந்து கொச்சிக்கு சென்ற தனியார் விமானத்தில் பயணித்த ஜோசப், தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த லட்சுமி கோபக்குமார் என்ற டிவி நடிகையிடம் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் லட்சுமி கோபக்குமார். இந்த வழக்கு ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கைத் தொடர்ந்து அமைச்சர் பதவியைப் பறி கொடுத்தார் ஜோசப்.
இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டது ஆலந்தூர் கோர்ட். இதையடுத்து அவர் மீண்டும் அமைச்சரானார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு முன்பாக தனது கேரள காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு கேரள காங்கிரஸ் மணி பிரிவில் போய் சேர்ந்து கொண்டார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இப்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தொடுபுழா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஜோசப் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், அசிங்கமாக பேசியதாகவும் குற்றம் சாட்டி கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார்.
ஜோசப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியாக பீர்மேடு எம்.எல்.ஏ. பிஜி மோள், தொடுபுழா பி.எஸ்என்எல் அதிகாரி ஆகியோரையும் அவர் சேர்த்துள்ளார்.
இந்த வழக்கைப் பரிசீலித்த மாஜிஸ்திரேட், சம்பந்தப்பட்ட இருவருக்கும் ஜூன் 4ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இடதுசாரி கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது செக்ஸ் சர்ச்சையில் சிக்கிய ஜோசப், தற்போது காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில் மீண்டும் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக சர்ச்சையில் மாட்டியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications