14 வயது மாணவி பலாத்காரம்-குமரி போலீஸ் அதிகாரியிடம் தீவிர விசாரணை
நாகர்கோவில்: கேரளாவில் 14 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குமரி மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவரிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடந்துள்ளது.
எர்ணாகுளத்தை சேர்ந்த 14 வயது மாணவியை அவரது தந்தையே விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் மாணவியை பலத்காரம் செய்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சில அதிகாரிகள், விஜபிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்தி குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த கான்ட்ரக்டர் மணிகண்டனை கைது செய்தனர்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள், மற்றும் நெடுஞ்சாலை துறை, பொதுபணி்துறை அதிகாரிகள் பலருக்கு மணிகண்டனுடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களில் சிலர் மணிகண்டனின் உதவியோடு மாணவியை பலத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது.
மணிகண்டன் அளித்த வாக்குமுலத்தின்படி முதல் கட்டமாக 2 போலீஸ் அதிகாரிகள் இதில் சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் முதல் பட்டியில் உள்ளவர்களில் 15 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களில் குமரி மாவட்ட அதிகாரிகளும் அடங்குவர்.
மொத்தம் 5 கேரள தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு தனிப்படை போலீசார் குமரி மாவட்டம் வந்துள்ளனர். மணிகண்டன் வாக்குமூலத்தில் தெரிவித்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. இதற்கிடையே மணிகண்டனுடன் தொடர்பு வைத்திருந்த அதிகாரிகள் பலரும் கலக்கத்தில் உள்ளனர். அவர்களில் பலர் இப்போது வெளி மாவட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications