14 வயது மாணவி பலாத்காரம்-குமரி போலீஸ் அதிகாரியிடம் தீவிர விசாரணை
நாகர்கோவில்: கேரளாவில் 14 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குமரி மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவரிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடந்துள்ளது.
எர்ணாகுளத்தை சேர்ந்த 14 வயது மாணவியை அவரது தந்தையே விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் மாணவியை பலத்காரம் செய்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சில அதிகாரிகள், விஜபிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்தி குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த கான்ட்ரக்டர் மணிகண்டனை கைது செய்தனர்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள், மற்றும் நெடுஞ்சாலை துறை, பொதுபணி்துறை அதிகாரிகள் பலருக்கு மணிகண்டனுடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களில் சிலர் மணிகண்டனின் உதவியோடு மாணவியை பலத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது.
மணிகண்டன் அளித்த வாக்குமுலத்தின்படி முதல் கட்டமாக 2 போலீஸ் அதிகாரிகள் இதில் சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் முதல் பட்டியில் உள்ளவர்களில் 15 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களில் குமரி மாவட்ட அதிகாரிகளும் அடங்குவர்.
மொத்தம் 5 கேரள தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு தனிப்படை போலீசார் குமரி மாவட்டம் வந்துள்ளனர். மணிகண்டன் வாக்குமூலத்தில் தெரிவித்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. இதற்கிடையே மணிகண்டனுடன் தொடர்பு வைத்திருந்த அதிகாரிகள் பலரும் கலக்கத்தில் உள்ளனர். அவர்களில் பலர் இப்போது வெளி மாவட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications