Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு- ஆக. 8க்கு விசாரணை தள்ளிவைப்பு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரி அவர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு கோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும் தான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறும், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணையில் பங்கேற்கத் தான் தயாராக இருப்பதாகவும் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேநேரத்தில் சசிகலாவு்ம், இளவரசியும் சமீபத்தி்ல கோர்ட்டில் நேரில் ஆஜராகினர். அன்றைய தினம் அவர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை. மாறாக இன்றைக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இன்று ஜெயலலிதாவின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, விசாரணையை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+