சத்தீஸ்கரில் இருந்து தமிழகத்திற்கு மலிவு விலையில் 630 மெகாவாட் மின்சாரம்-ஒப்பந்தம் கையெழுத்து

தமிழகத்தை மிகை மின் மாநிலமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 768 மில்லியன் டன் எடை கொண்ட நிலக்கரி சுரங்கம் உள்ளது. அங்கிருக்கும் நிலக்கரியைப் பயன்படுத்தி தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மின்சாரம் தயாரித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி தமிழகத்திற்கு 592 மில்லியன் டன் நிலக்கரியும், மகாராஷ்டிராவுக்கு 176 மில்லியன் டன்னும் கிடைக்கும். அந்த சுரங்கத்தை மேம்படுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானம் சார்பிலும், மகாராஷ்டிர மாநில சுரங்க கழகம் சார்பிலும் மகா-தமிழ் கூட்டு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரிலேயே அனல்மின் நிலையம் அமைக்க முடிவு செய்து மகா-தமிழ் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியது. அதில் லான்கோ இன்ப்ராடெக் லிமிடெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல் கடிதத்தை லான்கோ நிறுவனத் துணைத் தலைவர் பாஸ்கர் ராவிடம் முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
அப்போது முதல்வர் பேசியதாவது,
இந்த முயற்சியால் தமிழகத்திற்கு யூனிட் ரூ. 1.99 வீதம் 630 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மகாராஷ்டிராவுக்கு 23 சதவீதம் நிலக்கரி கிடைக்கும். நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள சத்தீஸ்கருக்கு 740 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
தமிழகத்தில் மின்சார நிறுவு திறன் அளவை அடுத்த 5 ஆண்டுகளில் தற்போதுள்ள 10 ஆயிரத்து 237 மெகாவாட் அளவில் இருந்து 23 ஆயிரத்து 140 மெகாவாட்டாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது, அனல்மின் நிலையத்தின் மூலம் 15 ஆயிரத்து 140 மெகா வாட் மின்சாரமும், காற்றாலைகள் மூலம் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும், சூரிய ஒளிசக்தி மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் 23 ஆயிரத்து 140 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் அனல்மின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய ஒளி சக்தி போன்ற பல்வேறு வழிகளில் மின்சாரம் தாயரிக்க தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் முன்வர வேண்டும். ஆலைகளை துரிதமாக அமைக்கத் தேவையான சூழ்நிலைகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications