எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை தமிழர்கள் பார்க்க இலங்கை அரசு தடை

Subscribe to Oneindia Tamil

Prabhakaran's hideout in Pudukudiyiruppu
புதுக்குடியிருப்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த புதுக்குடியிருப்பு வீட்டை சுற்றிப் பார்க்க சிங்களர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தமிழர்கள் வரக் கூடாது என்றும் இலங்கை அரசும், ராணுவமும் திடீரென தடை விதித்துள்ளனவாம்.

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள ஒரு வீட்டில் பிரபாகரன் வசித்து வந்தார். இந்த வீட்டை போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த பின்னர் தென் இலங்கையில் வசிக்கும் சிங்களர்கள் திரளாக வந்து பார்வையிட்டு்ச செல்கின்றனர்.

தமிழர் பகுதிகளைப் பார்த்தே அறியாத சிங்கள மக்களுக்கு பிரபாகரன் வீடு உள்ளிட்ட பகுதிகள் பெரும் ஆச்சரியக் குறியீடுகளாக மாறியுள்ளன. பிரபாகரன் கதையைக் கேட்டு கேட்டு அவர்கள் வியப்புடன் வீட்டைப் பார்த்துச் செல்கின்றனர்.

ஆரம்பத்தில் சிங்களர்கள் மட்டுமே வீட்டைப் பார்த்துச் சென்றனர். பின்னர் புதுக்குடியிருப்புப் பகுதியில் மீள் குடியமர்த்தப்பட்ட தமிழர்களும் வீட்டைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தென் இலங்கையைச் சேர்ந்த சிலர் வீட்டைப் பார்த்து விட்டு கேவலமாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே சண்டையாகி விட்டது.

இதையடுத்து தற்போது சிங்களர்கள் மட்டுமே வீட்டைப் பார்க்கலாம். தமிழர்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறி விட்டனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+