ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: சமூக சேவையினால் மனம் கவரப்பட்ட ஜெர்மன் பெண், புதுச்சேரி போலீஸ்காரரின் மகனை இந்துமுறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி வி.பி.சிங் நகரை சேர்ந்தவர் கணேசன். எஸ்.பி., அலுவலகத்தில் தலைமை காவலராக உள்ளார். அவரது மகன் கார்த்திகேயன் (29). அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியில் உள்ள பேபி சாரா அனாதைகள் இல்லத்தில் செயலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பேபி சாரா இல்லத்தில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த தீமேத்தேயுவின் மகள் லூயிசா (24) புதுச்சேரியில் படித்து வந்தார். அப்போது, கார்த்திகேயனின் சமூக சேவை பணிகளை கண்டு கவரப்பட்ட லூயிசா, அவரை காதலிக்க ஆரம்பித்தார். காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து கார்த்திகேயன், சில நாட்கள் ஜெர்மனி நாட்டிற்கு சென்று லூயிசாவின் பெற்றோரை சந்தித்து பேசினர். முடிவாக, நேற்று புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த லூயிசா தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி பட்டு சேலை உடுத்தி, விபூதிப் பொட்டு வைத்து மணக் கோலத்தில் வந்தது, கோயிலுக்கு வந்தவர்களை ஆச்சரியத்திற்குள்ளாகியது. திருமண விழாவில் மணமகள் லூயிசாவின் உறவினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+