சாலை விபத்தில் அசாருத்தீனின் உறவினர் மரணம், இளைய மகன் படுகாயம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருத்தீனின் மூத்த மனைவிக்கு இரண்டு மகன்கள். அசாதுத்தீன் மற்றும் அயாஸுத்தீன்(18). அயாஸுத்தீன் தனது உறவினர் ரஹ்மானுடன்(16) ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோட்டில் பைக்கில் படுவேகமாக சென்றுள்ளனர்.
ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள புப்புலகுடாவில் அவர்கள் பைக் சறுக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அயாஸுத்தீன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அப்ஸல் சிகிச்சை பலனின்றி பிரதாபமாக உயிர் இழந்தார்.
மகன் விபத்தில் சிக்கிய செய்தி கிடைத்ததும் அசாருத்தீன் லண்டனில் இருந்து ஹைதராபாத் விரைந்துள்ளார். அயாஸுத்தீன் தந்தை வழியில் கிரிக்கெட் வீரர் ஆக பயிற்சி மேற்கொண்டு வந்தார். பள்ளி கிரிக்கெட் அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அயாஸுத்தீன் புனித மேரி கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஹைதராபாத் எம்பி அசாதுத்தீன் குவைசி உள்ளிட்ட நண்பர்களும், உறவினர்களும் மருத்துவமனைக்கு சென்று அயாஸுத்தீனைப் பார்த்தனர்.












Click it and Unblock the Notifications