திருச்சி இடைத்தேர்தலுக்கு 7 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழு: ஜெயலலிதா அறிவிப்பு
திருச்சி: திருச்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 7 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருச்சி (மேற்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரஞ்ஜோதிக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விவரம் பின்வருமாறு,
ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.பொருளாளர்-நிதியமைச்சர்),கே.ஏ. செங்கோட்டையன் (தலைமை நிலையச் செயலாளர், வேளாண்மைத் துறை அமைச்சர்), ஆர்.வைத்திலிங்கம் (தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்-வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்),செல்லூர் கே.ராஜு (கூட்டுறவுத்துறை அமைச்சர்), ஆர்.பி.உதயகுமார் (அ.தி.மு.க.மாணவர் அணிச் செயலாளர்- தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்), வி.செந்தில்பாலாஜி (கரூர் மாவட்ட கழகச் செயலாளர்-போக்குவரத்துத் துறை அமைச்சர்), என்.ஆர்.சிவபதி (திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்-கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications