வாய் பேச முடியாத பெண் பலாத்காரம் செய்து படுகொலை

Subscribe to Oneindia Tamil

ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் வாய் பேச முடியாத பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆறுமுகநேரி காமராஜர்புரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பால்தாய், வாய் பேச முடியாதவர். இவர் வெற்றிவேலுக்கு 2வது மனைவி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன்- மனைவிக்கு இடையே கருதது வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 1 வருடமாக இருவரும் பிரித்து வாழ்ந்து வருகின்றனர். பால்தாய் தனது குழந்தைகளுடன் காமராஜர்புரத்தில் வசித்து வந்தார். கட்டிட தொழிலுக்கும் சென்று வந்தார்.

நேற்றிரவு பால்தாயின் குழந்தைகள் அப்பகுதியில் பால்தாயின் தாய் அற்புத மணி வீட்டிற்கு தூங்க சென்றுவிட்டனர். பால்தாய் மட்டும் தனியாக அவரது வீடடில் படுத்து தூங்கினார். இன்று காலை அற்புதமணி தனது பேத்திகளை அழைத்து கொண்டு பால்தாய் வீட்டிற்கு வந்தார்.

அங்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது பால்தாய் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்ததும் அற்புதமணி, குழந்தைகள் கதறி அழுதனர். உடனே இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஆறுமுகநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பால்தாயின் கழுத்து சேலையால் நெறிக்கப்பட்டிருந்தது.

இதனால் பால்தாயை யாராவது மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+