மோசடி வழக்கிலிருந்து சிவகாசி ஜெயலட்சுமி விடுதலை!

ஏட்டு முதல் எஸ்பி வரை 8 காவல்துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலட்சுமி.
போலீஸ் வேடத்தில் போய் காவல்துறையினர் பலரையும் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை சென்று பின்னர் அவர் விடுதலையானார்.
இந் நிலையில் இவர் மீது 5 ஆண்டுகளுக்கு முன் நகை மோசடி வழக்கை சிபிஐ பதிவு செய்தது. கோவையைச் சேர்ந்த முருகவேல் (இவர் இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மைத்துனர்) என்பவர் தந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜெயலட்சுமி 75 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிவகாசி ஜெயலட்சுமி, அவரது தம்பி சீனிவாசன் உட்பட 4 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி கதிரவன் உத்தரவிட்டார். ஏற்கனவே சிபிஐ பதிவு செய்த 3 வழக்குகளில் இருந்து விடுதலை ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பையொட்டி இன்று காலை சிவகாசியில் இருந்து ஜெயலட்சுமி மதுரை நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
முன்னதாக நேற்றும் இந்த வழக்கில் ஜெயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரை படம் பிடிக்க முயன்ற பத்திரிக்கை போட்டோகிராபர்களை திட்டித் தீர்த்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications