மோசடி வழக்கிலிருந்து சிவகாசி ஜெயலட்சுமி விடுதலை!

Subscribe to Oneindia Tamil

Sivakasi Jayalakshmi
மதுரை: பல போலீஸ் அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்திய சிவகாசி ஜெயலட்சுமி, சிபிஐ தொடுத்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஏட்டு முதல் எஸ்பி வரை 8 காவல்துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலட்சுமி.

போலீஸ் வேடத்தில் போய் காவல்துறையினர் பலரையும் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை சென்று பின்னர் அவர் விடுதலையானார்.

இந் நிலையில் இவர் மீது 5 ஆண்டுகளுக்கு முன் நகை மோசடி வழக்கை சிபிஐ பதிவு செய்தது. கோவையைச் சேர்ந்த முருகவேல் (இவர் இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மைத்துனர்) என்பவர் தந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜெயலட்சுமி 75 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிவகாசி ஜெயலட்சுமி, அவரது தம்பி சீனிவாசன் உட்பட 4 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி கதிரவன் உத்தரவிட்டார். ஏற்கனவே சிபிஐ பதிவு செய்த 3 வழக்குகளில் இருந்து விடுதலை ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பையொட்டி இன்று காலை சிவகாசியில் இருந்து ஜெயலட்சுமி மதுரை நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.

முன்னதாக நேற்றும் இந்த வழக்கில் ஜெயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரை படம் பிடிக்க முயன்ற பத்திரிக்கை போட்டோகிராபர்களை திட்டித் தீர்த்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+