தீபாவளியின்போது சென்னையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீபாவளி பண்டிகையின்போது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகர்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரு தினங்களுக்கு முன் டெல்லியில் தாக்குதல் நடத்த 5 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள், டெட்டனேட்டர்களுடன் காரில் வந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு காரணமாக அந்த காரை ஹரியாணா மாநிலம் அம்பாலா கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் வெளியே விட்டுவிட்டு தப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காரை போலீசார் கைப்பற்றியதால் டெல்லியில் நடத்தப்பட இருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

இந் நிலையில் தீபாவளியின்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகர்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்,

இதையடுத்து வழிபாட்டுத் தலங்கள், மார்க்கெட், விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் மற்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+