நெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு- அணைகள் வேகமாக நிரம்புகின்றன
Subscribe to Oneindia Tamil
நெல்லை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பரவலமாக மழை பெய்து வருகிறது. கடந்த 15 நாட்களாக பெய்து வரும் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குளங்களும் நிரம்புகின்றன. நேற்று இரவு பாபநாசம் மலை பகுதியில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன.
பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 65.70 அடியாக இருந்தது. இன்று இந்த அணை மேலும் 5.5 அடி உயர்ந்து 71.25 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே போல் நேற்று 83.73 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 93.90 அடியாகவும், 38.80 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை 41.25 அடியாகவும் உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications