ஆலோசனை நிறுவன தொழிலுக்கு முழுக்குப் போட்டார் நீரா ராடியா

வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் நீரா ராடியா. இவர் டாடா குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்களின் ஆலோசனை நிறுவனமாக ராடியாவின் வைஷ்ணவி குழுமம் செயல்பட்டு வந்தது.
மத்தியில் ராடியா ஒரு அதிகார தரகராக செயல்பட்டு வந்தது, அவரும், பல முக்கிய அரசியல் பிரபலங்களும் பேசிய தொலைபேசிப் பேச்சுக்களின் ஆடியோ லீக் ஆனபோதுதான் அனைவருக்கும் தெரிய வந்தது. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்ட பல பிரபலங்களுடன் அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ரத்தன் டாடாவுடன் அவர் பேசியதும் புயலைக் கிளப்பியது.
இதையடுத்து அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அவரது வீடு,அலுவலங்களில் ரெய்டும் நடத்தப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அவர் ஒரு சாட்சியாக சேர்கக்ப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கம்யூனிகேஷன் ஆலோசனை பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ராடியா. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது குடும்பம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன். எனவே எனது நிறுவனத்தின் பொறுப்பை தொடருவதிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளேன். புதிதாக எந்த வாடிக்கையாளரையும் சேர்ப்பதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளேன்.
இது மிகவும் வலி தரக் கூடிய முடிவு. இருப்பினும் தீவிர பரிசீலனை மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் ராடியா.
ராடியாவின் இந்த திடீர் முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, ராடியாவின் இந்த தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம். மிகக் கடுமையாக போராடி தனது வைஷ்ணவி நிறுவனத்தை உயர்த்தியவர் ராடியா. தனது வாடிக்கையாளர் நலனுக்காக குடும்பத்தைக் கூட இரண்டாம் கட்டமாக பார்த்தவர் ராடியா. அவரது உழைப்பும், செயல்பாடும் பாராட்டுக்குரியவை என்றார்.
இதேபோல ரிலையன்ஸ் நிறுவனமும் ராடியாவின் முடிவு குறித்து அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications