For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லிக்குப் போகாமல் மதுரை பண்ணை வீட்டில் ஹாயாக ரெஸ்ட் எடுக்கும் அழகிரி!

By Chakra
Google Oneindia Tamil News

Azhagiri
மதுரை: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தங்கை கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும், கையோடு சென்னைக்கு அழைத்துச் செல்லலாம் என அண்ணன் மு.க.ஸ்டாலின் டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் இன்னொரு அண்ணனான மு.க.அழகிரி டெல்லிக்கே போகாமல் மதுரை அருகே பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் அழகிரியும் டெல்லிக்குப் போயிருப்பதாக தகவல்கள் கூறின. ஆனால் அவர் டெல்லிக்கே போகாமல் மதுரையிலேயே தங்கியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

ஸ்டாலின் தலைமையில் திமுக முன்னணித் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் அழகிரி மட்டும் போகாமல் பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருவதால் திமுக வட்டாரம் சலசலப்படைந்துள்ளது. ஆனால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காமல் போனதால் அழகிரியும் பெரும் வருத்தமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஸ்டாலினை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்கவே அழகிரி டெல்லி போகவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

English summary
Union minister Azhagiri has not gone to Delhi to visit his sister Kanimozhi, who was denied bail by CBI court today. Azhagiri is reportedly taking rest in his farm house near Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X