தமிழக அமைச்சரவையில் மாற்றம்-6 பேர் நீக்கம்-6 பேர் சேர்ப்பு-திருச்சி மேற்கு பரஞ்சோதி அமைச்சரானார்!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக நேற்றுதான் செய்திவெளியானது.இந்த நிலையில் தற்போது அதிரடி மாற்றத்தை மேற்கொண்டுள்ளார் ஜெயலலிதா. அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் இது.
செந்தமிழன், உதயக்குமார், சிவபதி நீக்கம்
அமைச்சர்கள் செந்தமிழன், ஆர்.பி. உதயக்குமார், சிவபதி, சண்முகவேலு, புத்தி சந்திரன், சண்முகநாதன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மு.பரஞ்சோதி அமைச்சரானார்
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற மு.பரஞ்சோதி, பரமக்குடி எம்.எல்.ஏ. டாக்டர் சுந்தரராஜன், மாதவரம் வி.மூர்த்தி, நன்னிலம் காமராஜ், சிவகாசி ராஜேந்திர பாலாஜி, கிணத்துக்கடவு தாமோதரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம்
சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இனி தகவல் தொழில்நுட்பத்துறையை கவனிப்பார். தாமோதரனுக்கு வேளாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.வி.ரமணாவுக்கு சுற்றுச்சூழல் துறை வழங்கப்பட்டுள்ளது. டி.கே.எம்.சின்னையாவுக்கு கால்நடை பராமரிப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
சுந்தரராஜன் கைத்தறி துறை அமைச்சராக இருப்பார். மு.பரஞ்சோதிக்கு அறநிலையத்துறை, சட்டம், நீதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
செல்வி ராமஜெயம் சமூ்க நலத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். காமராஜுக்கு உணவுத்துறையும், மூர்த்திக்கு பால்வளத்துறையும் தரப்பட்டுள்ளது.
செய்தித் துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி செயல்படுவார்.
மு.சி. சம்பத்துக்கு ஊரக தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications